அழைத்தது மோடி, ஆனால் ஸ்டாலின் செல்வது எங்கே தெரியுமா?

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (14:29 IST)
நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திரமோடி வரும் 30ஆம் தேதியன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் மோடி பிரதமராக பதவியேற்கவிருக்கும் அதே நாளில் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கவுள்ளார். ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அழைப்பை ஏற்று, நாளை மறுநாள் நடைபெறும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. முன்னதாக ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்த்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments