Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழைத்தது மோடி, ஆனால் ஸ்டாலின் செல்வது எங்கே தெரியுமா?

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (14:29 IST)
நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திரமோடி வரும் 30ஆம் தேதியன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் மோடி பிரதமராக பதவியேற்கவிருக்கும் அதே நாளில் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கவுள்ளார். ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அழைப்பை ஏற்று, நாளை மறுநாள் நடைபெறும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. முன்னதாக ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்த்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments