Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழைத்தது மோடி, ஆனால் ஸ்டாலின் செல்வது எங்கே தெரியுமா?

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (14:29 IST)
நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திரமோடி வரும் 30ஆம் தேதியன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் மோடி பிரதமராக பதவியேற்கவிருக்கும் அதே நாளில் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கவுள்ளார். ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அழைப்பை ஏற்று, நாளை மறுநாள் நடைபெறும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. முன்னதாக ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்த்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments