Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜாஜி அரங்கிற்கு கொண்டு வரப்பட்டது கருணாநிதி உடல்

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2018 (05:44 IST)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் கோபாலபுரத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின் தற்போது பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த அவரது உடல் ராஜாஜி அரங்கிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இவரது இறப்புக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
கருணாநிதியின் உடல் நேற்று இரவு காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லம் மற்றும் சிஐடி காலனி உள்ள கனிமொழி இல்லம் ஆகிய இடங்களில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.
 
இன்று அதிகாலை 4 மணியளவில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்கில் அவரது உடல் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொண்டர்கள் அதிகளவில் குவிந்ததால் சற்று தாமதம் ஏற்பட்டு தற்போது கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கிற்கு கொண்டு வரப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments