Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸை கழட்டிவிட ஒற்றை இலக்கத்தில் தொகுதி தருவதாக தகவல்: திமுகவின் பலே திட்டம்

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (17:39 IST)
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி இந்த முறை இருக்காது என்றே கணிக்கப்படுகிறது 
 
குறிப்பாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 20 தொகுதிகள் எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
மேலும் திமுகவுக்கு ஆலோசனை கூறி வரும் பிரசாந்த் கிஷோர் இம்முறை எந்த கட்சியுடனும் கூட்டணி வேண்டாம் என்றும் 234 தொகுதிகளிலும் தனியாக நிற்கவும் ஆலோசனை கூறியுள்ளதாக தெரிகிறது 
 
எனவே கூட்டணி கட்சிகள் தானாகவே கழண்டு கொள்வதற்கு திமுக பலே ஐடியா ஒன்றை வைத்துள்ளது அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தான் சீட்டு தருவோம் என்று கூறுவதாகவும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் மட்டும் தான் என்றும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்தம் செய்தால் தானாகவே அந்த கட்சிகள் கழண்டு விடும் என்று ஆலோசனை செய்து இருப்பதாக தெரிகிறது 
 
எனவே இம்முறை திமுக கிட்டத்தட்ட கூட்டணி கட்சிகளை கழட்டிவிட்டு அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments