Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: தொண்டர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (21:06 IST)
நாமக்கல் அருகே செங்கப்பள்ளி என்ற பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் மருத்துவர் ஆனந்த்  தனக்கு சொந்தமான தோட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் ஒரு கோடீஸ்வரர் என்பதால் பணப்பிரச்சனை இவரது தற்கொலைக்கு காரணமாக இருக்காது என்று கருதப்படுகிறது
 
 
டாக்டர் ஆனந்த் மனைவி கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். டாக்டர் ஆனந்த் மனைவி இன்று வெளியூர் சென்றிருந்த நிலையில் திடீரென துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் இவர் கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை என்பதால் திடீரென தற்கொலை முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது
 
 
டாக்டர் ஆனந்த் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் டாக்டர் ஆனந்த் தற்கொலைக்கு முன் தனது கிளினிக்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஆகஸ்ட் மாத ஊதியத்தை இன்றே ஆனந்த் வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments