Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருவதும் போவதுமாய் இருக்கும் திமுக.. மீண்டும் வெளிநடப்பு

Arun Prasath
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (12:17 IST)
நேற்று சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டம் விவகாரம் தொடர்பாக திமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில் இன்றும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

நேற்று சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என கூறிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் இன்று இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதில் விவாதம் ஏற்பட்டதால் இன்றும் திமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற அதிமுகவின் நிலைப்பாடு என்றும் சரியானது தான் என மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். அமைச்சர் பாண்டியராஜன் அளித்த பதிலில் திருப்தி இல்லை என திமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments