Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (21:41 IST)
சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் இயங்கி வரும் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சற்றுமுன் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் திமுக தொண்டர்களிடையே  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சற்றுமுன்னர்  காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த ஒரு மர்ம தொலைபேசி அழைப்பில் அண்ணா அறிவாலயத்தில் வெடிகுண்டு இருப்பதாக இந்தி மொழி ஒரு மர்ம நபர் கூறியதாகவும், இதனையடுத்து உடனே அந்த தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். இதுவரை எந்தவிதமான வெடிகுண்டுகளும் சிக்கவில்லை என்ற தகவல் வந்துள்ளதால் இது வெறும் மிரட்டலாக இருக்கும் என கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்து டிக்கெட் Payement Fail ஆனால் அரை மணி நேரத்தில் பணம் ரிட்டர்ன்! - போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு!

நான் மோசடி செய்துட்டு ஓடினேனா? என்ன நடந்தது தெரியுமா? - முதல்முறையாக மனம் திறந்த மல்லைய்யா!

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments