இவங்க வரலாற்றையே மாத்திடுவாங்க! – குடியரசு தலைவருக்கு எம்.பிக்கள் கடிதம்!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (11:50 IST)
இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய உருவாக்கிய குழுவை கலைக்க சொல்லி 32 எம்.பிக்கள் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியாவின் கலாச்சார தோற்றம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை நியமித்துள்ளது. இந்த குழுவின் தமிழர்கள் யாரும் இல்லாமல் இருப்பது குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க திருச்சி சிவா மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சி எம்.பிக்கள் 32 பேரும் இணைந்து குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் இந்திய கலாச்சார தோற்றம் ஆய்வு செய்யும் குழுவில் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நிபுணர்கள் இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழில் இருந்து ஒருவர் கூட இல்லையென்றும், இதனால் வரலாறு திரிக்கப்படும் ஆபத்து இருப்பதால் ஆய்வு குழுவை கலைக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்த வழக்கறிஞர்: 41 லட்சம் ரூபாய் கைமாறியது அம்பலம்!

சன்னி லியோன் போஸ்டரை வயலில் ஒட்டிய விவசாயி! 'தீய சக்திகள்' நெருங்காமல் இருக்க என விளக்கம்..!

"துரியோதனன் தவறான அணியில் சேர்ந்தது" போன்றது: செங்கோட்டையன் குறித்து நயினார் நாகேந்திரன்..!

நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்பி.. கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் 'பவ் பவ்' என கிண்டல்!

பிரதமர் மோடி டீ விற்பது போன்ற AI கேலி வீடியோ.. காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments