Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் வீட்டு அலமாறியில் மசோதாக்கள்: திமுக எம்பி டி.ஆர்.பாலு

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (14:31 IST)
திமுக ஆட்சியில் இயற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநர் வீட்டு அலமாரியில் தூங்கிக் கொண்டிருப்பதாக டிஆர் பாலு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளதை அடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் இன்று வெளிநடப்பு செய்துள்ளனர் 
 
இதனை அடுத்து பாராளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி டிஆர் பாலு பேட்டியளித்தார். அப்போது அவர் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து 23  மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மசோதாக்களை அலமாரிகள் வைத்துக்கொண்டு ஆளுநர் கையெழுத்து போடாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்
 
வளர்ந்த நாடுகளில்கூட ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் பலமுறை எச்சரித்தும் வலியுறுத்தியும் ஆளுநர் மௌனமாக இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இது குறித்து மக்களவையில் குரல் எழுப்பினோம் என்றும் ஆளுநரை திரும்பப் பெற கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும் டி ஆர் பாலு இந்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments