Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உளவுத்துறையால் மிரட்டப்பட்டாரா திமுக எம்பி கதிர் ஆனந்த்? பரபரப்பு புகார்!

உளவுத்துறையால் மிரட்டப்பட்டாரா திமுக எம்பி கதிர் ஆனந்த்? பரபரப்பு புகார்!
, செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (16:30 IST)
திமுகவின் எம்பிக்களில் ஒருவரான கதிர் ஆனந்த் தன்னை உளவுத்துறை அதிகாரிகள் மிரட்டியதாக ஒரு புகாரைக் கூறியுள்ளார்.

திமுக வின் மக்களவை உறுப்பினர்களில் ஒருவரும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனும் ஆகிய கதிர் ஆனந்த் இன்று மக்களவையில் தன்னை சிலர் மிரட்டியதாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளார். சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் அளித்த புகார் மனுவில் ‘நான் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தனக்கு மிரட்டல் விடுத்தனர். மேலும், தங்களை உளவுத்துறையினர் என கூறிக்கொண்டனர். ஒரு மக்களவை உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாமூல் கேட்டு தாக்கிய அதிமுக பிரமுகர்! – புகார் அளித்த கடைக்காரர்!