Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் பேச்சால் ஒரு பிரயோஜனமும் இல்ல... ஸ்டாலின் காட்டம்!

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (10:46 IST)
தமிழக ஆளுநர் உரையால் நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை என காட்டமாக பேட்டியளித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
 
2020 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று துவங்கியது. இது 15வது சட்டப்பேரவையின் 8வது கூட்டத்தொடர். மேலும் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடஎ என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டத்தொடர் துவங்கியது. 
 
பன்வாரிலால் புரோஹித் துவக்கதிலேயே எனது உரையை தொடர்ந்து அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கலாம் என கூறினார். அதோடு, பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை பயன்படுத்துங்கள்  எனவும் கூறினார். 
 
ஆனால், குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இவர்களை தொடர்ந்து டிடிவி தினகரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 
 
வெளியேறிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேச அனுமதிக்காததால் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர் என தெரிவித்தார். அதோடு, தமிழக ஆளுநர் உரையால் நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை எனவும் காட்டமாக தெரிவித்தார். 
 
ஆனால், ஆளுநரோ இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க என்ன ரோடு ஷோ நடத்துறீங்க! உதயநிதிக்கு நடக்கப்போகும் ரோடு ஷோவை பாருங்க! - ராஜ் கவுண்டர் சூளுரை!

தமிழகத்தில் இந்த ஆண்டு 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைகிறதா? மாணவர்கள் அதிர்ச்சி..!

அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு..! திமுகவில் இணைகிறாரா?

மகனே திரும்பி வா..! கதறி அழுத அரசர்! சவுதி அரேபியாவின் ‘Sleeping Prince’ காலமானார்!

கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! இடைஞ்சலாக இருந்த கணவன்! - மனைவி செய்த கொடூரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments