Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

Mahendran
சனி, 15 ஜூன் 2024 (18:05 IST)
லால்குடி எம்எல்ஏ தனது சமூக வலைதளத்தில் நான் இறந்து விட்டேன் எனது தொகுதியை காலி ஆகிவிட்டது என்று ஆதங்கத்துடன் பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி எம்எல்ஏவாக சௌந்தர பாண்டியன் என்பவர் இருந்து வரும் நிலையில் அவருக்கு அரசு விழாக்களில் எந்த விதமான அழைப்பும் இல்லாமல் இருந்ததாகவும் அதனால் அவர் அரசு விழாவில் பங்கேற்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் கட்டப்படும் புதிய அலுவலகத்திற்கான கட்டிடங்களுக்கான இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
 
இதில் கூட லால்குடி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சௌந்தர பாண்டியனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏவான சவுந்தரபாண்டியன் என்பவர் இயற்கை எய்துவிட்டதால் அந்த தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற பதிவு செய்துள்ளார்.
 
இந்த பதிவு திமுகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

புவிசார் குறியீடு ஏன் தரப்படுகிறது? அதனால் என்ன பயன்? தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

நேற்றைய மோசமான சரிவுக்கு பின் இன்று உயர்ந்தது பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

உங்களை நேரில் சந்திக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments