Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்எல்ஏ மகன், மருமகள் எங்கே? 3 தனிப்படைகள் அமைப்பு.! தேடும் பணி தீவிரம்.!!

Senthil Velan
செவ்வாய், 23 ஜனவரி 2024 (13:56 IST)
வீட்டில் பணிபுரிந்த 18 வயது இளம்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் தலைமறைவாக உள்ள திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளை பிடிக்க போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர்.
 
சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கருணாநிதி. இவரது மகன் ஆண்டோ வீட்டில் 18 வயது இளம் பெண் ஒருவர் பணிபுரிந்து வந்தார். அந்தப் பெண்ணை ஆண்டோவும், அவரது மனைவி மெரலினாவும் சேர்ந்து சித்திரவதை செய்துள்ளனர்.
 
அந்தப் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கியும், கைகளில் சிகரெட்டால் சூடு வைத்தும், துன்புறுத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
 
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில்,  திமுக எம்எல்ஏவின் மகன் ஆண்டோ, அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இருவரும் தலைமறைவாகினர்.

ALSO READ: ராகுல் காந்தி நடைப்பயணத்தில் போலீசார் தடியடி.! அசாமில் பதற்றம்.!!

இந்நிலையில் இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய புகாரில் பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன், மருமகளை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்த போலீசார், அவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக பாஜக தலைவர் பதவி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கட்சியின் தேர்தல் அதிகாரி..!

பாட்டிலில் பெட்ரோல் தர மறுப்பு.. பங்க் மேனேஜரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

நிதிஷ் குமாருக்கு துணை பிரதமர் பதவி.. பாஜக மூத்த தலைவர் கருத்து..!

அண்ணியை பற்களால் நாத்தனார்.. உயர்நீதிமன்றம் அளித்த வித்தியாசமான தீர்ப்பு..!

மனைவியை காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. தியாகி பட்டம் தந்த கிராமத்தினர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments