Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொட்டாச்சிணுங்கி போல தொட்டால் விழும் கட்டிடம்! – ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை??

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (10:37 IST)
சென்னை புளியந்தோப்பு ஹவுசிங் யூனிட் கட்டிட விவகாரம் குறித்து ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள பரந்தாமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடிசை மாற்று வாரியத்தின் கீழ் சென்னை புளியந்தோப்பு கே.பி,பார்க்கில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. மக்கள் அக்குடியிருப்புகளில் குடியேறி சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் சுவர்கள் கை வைத்தாலே உதிர்ந்து கொட்டுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இன்று தமிழக சட்டப்பேரவையில் விவாதம் ஏற்பட்ட நிலையில் பேசிய திமுக பரந்தாமன் “தோட்டாச்சிணுங்கி போல தொட்டால் உதிரும் குடியிருப்பதை அதிமுக கட்டியுள்ளது. சென்னை புளியந்தோப்பு தரமற்ற குடியிருப்பு விவகாரத்தில் அப்போதைய வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இந்த கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தீர்மானம் முன்மொழிந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments