Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொறியாளரை தாக்கிய விவகாரம்; திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது வழக்கு!

Advertiesment
Tamilnadu
, சனி, 29 ஜனவரி 2022 (12:18 IST)
மாநகராட்சி உதவி நிலை பொறியாளரை தாக்கியதாக திமுக எம்.எல்.ஏ கே.பி.சங்கர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருந்து வருபவர் கே.பி.சங்கர். இவர் அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் இருந்த மாநகராட்சி உதவிப் பொறியாளரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதை தொடர்ந்து கே.பி.சங்கர் கட்சியில் வகித்து வந்த முக்கிய பதவியிலிருந்து திமுக அவரை விலக்கி உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நேற்று மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசிய கே.பி.சங்கர் உரிய விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் சாலை பணி நடைபெற்ற இடத்திற்கு தான் செல்லவில்லை என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் மாநகராட்சி பொறியாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ கே.பி. சங்கர் மீது திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கே.பி.சங்கர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோளப்பயிரை மேய்ந்த 78 ஆடுகள் பலி! – கமுதியில் அதிர்ச்சி சம்பவம்!