Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக எம்பிக்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு

திமுக எம்பிக்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
, வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (21:33 IST)
டெல்லியில் இன்று திமுக எம்பிக்கள் காஷ்மீர் பிரச்சனைக்காக மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 24ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த கூட்டம் தற்போது ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே தி.மு.க சார்பில் அக்கட்சியின் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதற்காக நன்றி அறிவிப்பு கூட்டம் ஆகஸ்ட் 18ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த அந்த கூட்டம் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இந்த நன்றி அறிவிப்பு கூட்டம் மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
 
திமுக திட்டமிட்ட கூட்டம் என்றால் அந்த கூட்டங்கள் சரியான நேரத்தில் நடைபெறும் என்பதுதான் கடந்த கால வரலாறு. ஆனால் தற்போது அடிக்கடி திட்டமிடப்பட்ட கூட்டங்கள் வேறு தேதிகளுக்கு மாற்றுவதை திமுக தொண்டர்கள் வித்தியாசமாக பார்க்கின்றனர்
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கஜகஸ்தான் அரசுக்கு எதிராக களம் இறங்கிய கூகுள் மற்றும் மொசில்லா நிறுவனம் - ஏன் தெரியுமா?