Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்., 14 முதல் விருப்ப மனு - திமுக தலைவர் ஸ்டாலின்

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (14:17 IST)
தமிழகத்தில் கூடிய விரையில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. அதில் போட்டியிட  வரும் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்,இன்று,  திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் வரும் 16 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமென மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மு. க. ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வரும் 14 ஆம் தேதிமுதல் 20 ஆம் தேதிவரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என கூறினார்.
 
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போடியிட விரும்புவோர், நவம்பர் 15,, 16 ஆகிய தேதிகளில் கட்சி அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகங்களில்  விருப்ப மனு பெறலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிமுக மாவட்ட தலைமையகத்தில் அளிக்கலாம்  என அதிமுக தலைமை நேற்று, அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மையாகிறது யமுனை நதி.. பதவியேற்கும் முன்னரே பணிகள் தொடக்கம்..!

ஒரு மணி நேரம் லிப்டில் சிக்கிய கடலூர் காங்கிரஸ் எம்பி.. தீயணைப்பு துறையினர் மீட்பு..

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உதவித்தொகை ரூ.2000.. அண்ணாமலை வாக்குறுதி

அமெரிக்காவில் திடீர் கனமழை.. வெள்ளத்தில் 9 பேர் பலி.. 39,000 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு..!

டெல்லி நில அதிர்வு குறித்து பதட்டம் வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

அடுத்த கட்டுரையில்
Show comments