Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தன்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: திமுக அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (11:50 IST)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று வணிகர்கள் சங்கம் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சாத்தான்குளம் தந்தை மகனின் மரணத்தில் நீதி வேண்டும் என்று திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன
 
இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜெயராஜ் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூபாய் 25 லட்சம் நிவாரணம் அளிக்க உள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் நீதிக்கான போராட்டத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும் என்றும் ஸ்டாலின் உறுதி கூறியுள்ளார் 
 
ஏற்கனவே சாத்தான்குளம் சம்பவத்தில் மரணமடைந்த தந்தை மகன் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசுப் பணியும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments