Publish Date: Sun, 10 Nov 2019 (09:32 IST)
Updated Date: Sun, 10 Nov 2019 (09:36 IST)
திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் திமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட திட்டமிடப்பட்ட நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளீல் இடைத்தேர்தல் வந்ததால் நவம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன் படி இன்று ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் இடைத்தேர்தல் தோல்வி குறித்தும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.