Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி ஆசையில் திமுகவில் சேர்ந்தவன் இல்லை நான்! – துரைமுருகன் தடாலடி விளக்கம்!

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (11:08 IST)
திமுக பொதுசெயலாளர் பதவி தரப்படாததால் துரைமுருகன் வருத்தத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்ட நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் துரைமுருகன்.

திமுக கட்சியின் பொருளாளராக இருந்து வருபவர் துரைமுருகன். கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான இவர் திமுக பொதுசெயலாளர் அன்பழகன் மறைவை தொடர்ந்து அந்த பதவிக்கு போட்டியிட இருந்தார். கட்சி செயற்குழு கூட்டத்திலும் கிட்டத்தட்ட இந்த முடிவு எட்டப்பட்ட நிலையில் கொரோனா போன்ற பிரச்சினைகளால் பதவி தேர்ந்தெடுப்பு நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பொதுசெயலாளர் பதவி கிடைக்காததால் துரைமுருகன் விரக்தியில் இருப்பதாக பேசிக் கொள்ளப்பட்டது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள துரைமுருகன் “எனது கல்லூரி காலத்திலிருந்தே திமுகவில் இருந்து வருகிறேன். திமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தெனே தவிட பதவி ஆசைகளால் அல்ல. பொதுசெயலாளர் பதவி எனக்கு கிடைக்காவிட்டாலும் அதை பற்றி கவலைப்படாமல் அடிப்படை உறுப்பினராக கூட கட்சிக்கான தொண்டை செய்வேன். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்” என கூறியுள்ளார். மேலும் தன்னை பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments