Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 தொகுதிகளில் ஏன் தோற்றம் ?– ஆய்வில் இறங்கியது திமுக !

Webdunia
ஞாயிறு, 16 ஜூன் 2019 (19:51 IST)
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 9 தொகுதிகளில் அடைந்த தோல்வி குறித்து ஆய்வு செய்ய திமுக குழு ஒன்றை அமைத்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக அபாரமாக வெற்றி பெற்றாலும் 22 தொகுதி இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 9 தொகுதிகளை இழந்ததால்  ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனது. இதனால் திமுக ஆட்சி அமைக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று திமுக வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 9 தொகுதிகளில் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆராய திமுக தலைமை ஒரு குழுவை அமைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவுக்கு தலைமைக் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர். இளங்கோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையின் கீழ் மொத்தம் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஒருவர் என இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு  எப்போதில் இருந்து ஆய்வைத் தொடங்கவேண்டும் என்பதைப் பின்னர் அறிவிக்கப்படும் என முரசொலி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments