ஒரே நாடு … ஒரே தேர்தல் – அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் மோடி அழைப்பு !

Webdunia
ஞாயிறு, 16 ஜூன் 2019 (19:42 IST)
தேர்தலுக்குப் பின் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி மக்களவைக் கூட்டத்தில் நாடு முழுவதுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதிய மக்களவை உறுப்பினர்கள் அடங்கிய அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை தொடங்கி வைத்த மோடி கூட்டம் புத்துணர்ச்சியோடும் புதிய சிந்தனைகளுடனும் தொடங்க வேண்டுமென்று வேண்டுகோளோடு தொடங்கிவைத்தார்.

இந்தக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஜூன் 19ஆம் தேதியன்று ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தக் கூட்டம் முடிந்து மோடி தனது டிவிட்டரில் ’தேர்தலுக்குப் பிறகு இன்று முதல் முறையாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்து தலைவர்களும் வழங்கிய அறிவுரைகளுக்கு நன்றி. நாடாளுமன்றத்தை சுமூகமாக இயக்க அனைவரும் ஒத்துக்கொண்டோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments