Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களத்தில் இறங்கிய திமுக: அதிமுகவிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார்

Webdunia
திங்கள், 4 மார்ச் 2019 (13:50 IST)
தேர்தலை மனதில் வைத்தே அதிமுக 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்ததாகவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
 
தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தபடி 60 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதியுதவியாக வழங்கும் சிறப்புத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
 
இந்நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஆளும் அதிமுக அரசு தேர்தலை மனதில் வைத்தே 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை வைத்து வாக்குகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளது.
 
ஆகவே இதனை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments