Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களின் கோபமே எங்களுக்கு ஆயுதம்: திமுக வேட்பாளரின் வியூகம்!!

Webdunia
சனி, 25 நவம்பர் 2017 (20:27 IST)
வருகிற டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததுள்ளது. திமுக தனது கட்சி வேட்பாளரை அறிவித்தது. 
 
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதன் பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது திமுக சார்பாக போட்டியிட்ட மருது கணேஷையே இந்த முறையும் வேட்பாளராக தேர்வு செய்துள்ளார்.
 
அதன் பின்னர், திமுக வேட்பாளர் மருது கணேஷ்-க்கு ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அறிவித்தார். 
 
இந்நிலையில், மருது கணேஷ் தனது தேர்தல் வியூகத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். திமுக தலைவர் கருணாநிதி, அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி.
 
ஆர்.கே.நகர் தொகுதி மக்கள், அரசின் மீதும் ஆட்சியின் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். மக்களின் கோபமே எனக்கு வெற்றியை பெற்றுத் தரும் என்று தெரிவித்துள்ளார்.
 
அதோடு, ஆதரவு அளித்துள்ள தோழமை கட்சிகளுக்கும் நன்றி. இந்த தேர்தலில் பிரச்சாரமே செய்ய தேவையில்லை. ஏனெனில் கடந்த முறையே எல்லா பிரச்சினைகள் பற்றியும் பிரச்சாரம் செய்து முடித்துவிட்டோம். நிச்சயம் வெற்றி பெறுவோம் என மருது கணேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments