Publish Date: Sat, 13 Apr 2019 (12:38 IST)
Updated Date: Sat, 13 Apr 2019 (12:54 IST)
திமுக சூலூர் அரவக்குறிச்சி, ஒட்டபிராம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தற்போது அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடக்கும் என்றும் மே 23 ஆம் தேதி தேர்தல் எண்ணிக்கை நடக்கும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 9ந் தேதி அறிவித்திருந்தது.
இந்நிலையில் திமுக சூலூர் அரவக்குறிச்சி, ஒட்டபிராம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி
சூலூர் - பொங்கலூர் பழனிசாமி
அரவக்குறிச்சி, - செந்தில் பாலாஜி
ஒட்டபிராம் - எ.சி.சண்முகையா
திருப்பரங்குன்றம் - ப. சரவணன்
ஆகியோர் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அதிமுக ஆட்சியை தக்கவைக்க இந்த இடைத்தேர்த்லில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறது. ஆனால் அதிமுகவை எப்படியாவது ஒழித்துக்கட்டி ஆட்சியை பிடிக்க சூறாவளி வேகத்தில் களப்பணி மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின். இரு கட்சிகளின் வியூகங்களும் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.