Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் யார்? திமுகவின் அடுத்த நகர்வு!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (11:00 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற திமுக தலைமை பொறுப்புகளுக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளது. 

 
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்றி இருப்பது வரலாறு காணாத வெற்றியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அக்கட்சிக்கு பெற்று தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
திமுகவின் அமோக வெற்றியை அடுத்து சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் சென்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், உதயநிதி, ஆ ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். 
 
இந்நிலையில் வெற்றி களிப்பில் திமுகவினர் இருக்கும் நிலையில் 21 மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயருக்கான நபர்களை தேர்வு செய்யும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளது. 134 நகராட்சி தலைவர், துணை தலைவர், 435 பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவரையும் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
 
இப்பணிகள் முடிந்ததும் தலைமை பொறுப்புகளுக்கு போட்டியிடுபவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி செய்து அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவிய ஈரான்.. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி..!

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி இழப்பீட்டு தொகை: எல்.ஐ.சி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments