குடியுரிமை சட்டம்: மீண்டும் போராட்டத்தை அறிவித்த திமுக!

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (13:04 IST)
மத்திய அரசின் குடியுரிமைச் சட்டதிருத்தம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடைப்பெற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று நிறைவேற்றப்பட்ட நிலையில் எல்லாம் முடிந்த பின்னர் திமுக காங்கிரஸ் உட்பட அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன
 
இந்த நிலையில் ஏற்கனவே திமுக சார்பில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஒரு போராட்டத்தையும், திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் ஒரு போராட்டமும் தமிழகம் முழுவதும் நடைபெற்றது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று கூடிய அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் மீண்டும் ஒரு போராட்ட அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையில் தோழமை கட்சியினர் வரும் 23ஆம் தேதி சென்னையில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த பேரணியில் தோழமை கட்சிகள் மட்டுமின்றி மற்ற கட்சியினர், அனைத்து அமைப்பினர் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
மேலும் மத்திய அரசு சொல்வதை அடிபணிந்து ஏற்பவர் தான் முதல்வர் பழனிசாமி என்றும் அதிமுக, பாமக ஆதரவால் தான் குடியுரிமை சீர்திருத்த சட்டம் நிறைவேறியது என்றும் அதிமுக பாமகவை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தத் தீர்மானத்தால் என்ன லாபம் என்பதை திமுகவினர் தான் சொல்ல வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் அரசியல் எதிரி இல்லையா? பாஜகவை மட்டும் விமர்சனம் செய்த விஜய்..!

6 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு: நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி எந்த வங்கிக்கு மாறும்?

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments