Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உள்ளாட்சி தேர்தல்: திமுக - விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது!

உள்ளாட்சி தேர்தல்: திமுக - விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது!
, ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (14:46 IST)
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாமக தனித்துப் போட்டியிடுவது என்பதும், அதேபோல் அமமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக தனித்து போட்டியிடுகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் மக்கள் நீதி மையம் கட்சி வழக்கம்போல் தனித்துப் போட்டியிடுவது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதே கூட்டணியில் இருக்கும் போல் தெரிகிறது. அதனடிப்படையில் திமுக விடுதலைச் சிறுத்தைகள் இடையே தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 
 
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், தொகுதிகளில் உள்பட 11 ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் இடங்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடப்பட்டது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலில் யாருக்கு எவ்வளவு இடங்கள்? – அதிமுக – பாஜக பேச்சுவார்த்தை!