Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்து கேட்கும் காங்கிரசுக்கு ஒன்று கூட ஒதுக்க முன்வராத திமுக: கூட்டணி உடையுமா?

Webdunia
ஞாயிறு, 30 ஜனவரி 2022 (10:56 IST)
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 22 மாநகராட்சிகளில் 5 மாநகராட்சி தங்களுக்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சி கேட்பதாகவும் ஆனால் ஒன்றைக் கூட ஒதுக்க திமுக முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது 
 
22 மாநகராட்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று திமுக உறுதி செய்துள்ளதாகவும் வேண்டுமானால் நான்கு அல்லது ஐந்து துணை மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு தர திமுக முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஆனால் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் குறைந்தபட்சம் மூன்று தொகுதிகளை வாங்க வேண்டும் என்று தீவிரமாக உள்ளதாகவும் இதுகுறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
ஒரு மேயர் தகுதி கூட காங்கிரசுக்கு ஒதுக்க வில்லை என்றால் ஒரு சில இடங்களில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments