Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின், தினகரன் கட்சிகள் ஒற்றுமை – எதில் தெரியுமா ?

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2019 (20:03 IST)
கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக திமுக மற்றும் அமமுக ஆகியக் கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் வைக்கும் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதால் ஆசிரியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக சென்னையைச் சேர்ந்த மாணவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்  நீதிபதிகள் ஜனவரி 25 (இன்று) க்குள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் இன்றும் பணிக்குத் திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
போராட்டங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை, தினமும் காலையி போலிஸார் கைது செய்து  பின்னர் மாலையில் விடுதலை செய்து வருகின்றனர். போராட்டத்தில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதால் காவல்துறையால கடினமான அடக்கு முறைகளைக் கையாள முடியவில்லை.  அதனால் முக்கியமான நிர்வாகிகளைக் கைது செய்து அதன் மூலம் போராட்டத்தை நீர்த்துப் போக செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் ஆளுங்கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக திமுக மற்றும் அமமுக நிர்வாகிகள் போராட்டக்காரர்களை சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் போராட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு வருகின்றன. திமுக மற்றும் அமமுக ஆகியக் கட்சிகளின் ஆதரவு ஒருங்கே கிடைத்துள்ளதால் ஆளுங்கட்சிக்கு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. ஏற்கனவே இடதுசாரிக் கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments