Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலை!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (09:09 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த ஒரு மணி நேரமாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
 சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களே முன்னிலையில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
21 மாநகராட்சியில் உள்ள 118 வார்டுகளில் திமுக முன்னிலையில் உள்ளது. அதேபோல் அதிமுக 12 மாநகராட்சி வார்டுகளிலும் மற்றவை மூன்று மாநகராட்சி வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளன 
 
மேலும் 310 நகராட்சி வார்டுகளில் திமுகவும் 97 நகராட்சி வார்டுகளில் அதிமுகவும் 23 நகராட்சி வார்டுகளில் மற்றவையும் முன்னிலையில் உள்ளன. அதே போல் 774 பேரூராட்சி வார்டுகளில் திமுகவும் 334 பேரூராட்சி வார்டுகளில் அதிமுகவும் 119 பேரூராட்சிகளில் மற்றவையும் முன்னிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

கூலி வேலைக்கு சென்று வைரத்துடன் திரும்பும் தொழிலாளிகள்.. ஆந்திராவில் பரபரப்பு..!

20 வயது திருமணமான பெண் கொலை.. வாயில் வெடிமருந்து வெடிக்க செய்த கள்ளக்காதலன்..!

காதலனை பணத்திற்காக விற்ற காதலி! சீனாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments