Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் லைட் எரிகிறதா? திமுக, அதிமுக திடீர் போராட்டம்..!

Mahendran
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (13:32 IST)
எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் லைட் எரிகிறது என்று திடீரென திமுக மற்றும் அதிமுக முகவர்கள் போராட்டம் நடத்தியதால் வியாசர்பாடி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடி அருகே எம்கேபி நகர் என்ற பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 150ஆவது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிகிறது என திடீர் என புகார் எழுந்தது.

இந்த புகாரை அடுத்து அங்கிருந்து அதிமுக மற்றும் திமுக முகவர்கள் திடீரென தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

வாக்களித்த சிலர் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில்  லைட் எரிவதாக வந்து சொன்னதால்தான் நாங்கள் தர்ணா போராட்டம் நடத்துகிறோம் என்று திமுக அதிமுக முகவர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனா தேர்தல் அதிகாரிகள் இது குறித்து விளக்கம் அளித்து அப்படி எல்லாம் லைட் எரியாது என்றும், எந்த சின்னத்துக்கு வாக்களிக்கிறோமோ அந்த சின்னத்தில் தான் லைட் எரியும் என்று கூறிய அவர்களை சமாதானப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments