Publish Date: Mon, 20 Sep 2021 (10:20 IST)
Updated Date: Mon, 20 Sep 2021 (10:47 IST)
திமுக கூட்டணிக் கட்சிகள் இன்று கருப்புக் கொடி ஏந்தி ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இன்று கருப்புக் கொடி ஏந்தியும், கருப்பு சட்டை அணிந்தும் போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் ஈடுபட உள்ளனர்.