Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உச்சநீதிமன்றம் சென்ற திமுக..

Arun Prasath
திங்கள், 9 டிசம்பர் 2019 (11:40 IST)
உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என திமுக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

தொகுதி மறுவரையறை செய்யப்படாத வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் அறிவித்தது.

இந்நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை என மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது திமுக. மேலும் திமுகவின் கோரிக்கையை ஏற்று நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.

இன்று ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் திமுக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments