Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு ஆபத்து தான்... எச்சரிக்கை அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த்!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (08:55 IST)
தற்போது வழங்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்களுக்கு ஆபத்து தான் என தேமுதிக விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
அந்த அறிக்கையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றி வருகிறது. 
 
ஆனால், தற்போது பொது போக்குவரத்திற்கு அனுமதி, வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி, ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு நீக்கம் உள்ளிட்டவைகளால் பெரும்பான்மையான துறைகள் செயல்பட துவங்கியுள்ளது.
 
மக்கள் அனைவரும் இதனை சுதந்திரமாக உணர்ந்தாலும், இதில் பல்வேறு ஆபத்துக்களும் உள்ளது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரை கொரோனா தாக்கம் அதிக அளவில் இருக்கும் என பல்வேறு கருத்துகள் வெளியாகி உள்ளது. 
 
எனவே நோய் பாதிப்பை முளையிலேயே கிள்ளி எரிந்துவிட்டால் எந்த பாதிப்பும் இல்லாமல் அனைவரும் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோடு வாழலாம். ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, அனைவரும் பாதுகாப்பாக இருப்போம், வருமுன் காப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments