Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் போட்டு போட்டோ போடுங்க! – கேப்டனின் புதிய சேலஞ்ச்!

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (11:37 IST)
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தேமுதிக தொண்டர்களை புதிய சேலஞ்ச் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வரும் நிலையில் மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்றனர். அதில் முக்கியமாக சானிட்டைசர் கொண்டு கை கழுவது, மாஸ்க் அணிவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் முக கவசம் அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிரவும், டிபியாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து பலர் முக கவசம் அணிந்து போட்டோக்களை பகிர்ந்து வரும் நிலையில், இதை ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோதே தெரிவித்திருந்தால் மேலும் உபயோகமாக இருந்திருக்கும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments