மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்: தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 20 மே 2021 (19:37 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவரது உடல்நிலை குறித்து எழும்பி வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தேமுதிக தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மூச்சு திணறல் காரணமாக கடந்த 2 நாட்களாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது அவர் கூறியதை அடுத்து டிசார் செய்யப்பட்டார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குணமாகி வீடு திரும்புவதை அடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெற்ற அப்பாவுக்கே இந்த நிலையா?..இன்சூரன்ஸ் பணத்திற்காக பாம்பை வைத்து தந்தையை கொன்ற மகன்கள்

இம்ரான்கானுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை.. மனைவிக்கும் அதே தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு..!

பொங்கல் பண்டிகைக்கு பிறகு எங்களை பார்த்து ஒட்டுமொத்த நாடே வியக்கும்: செங்கோட்டையன்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற முடியலையே.. மன வருத்தத்தில் மதுரை இளைஞர் தற்கொலை..!

13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞர்.. கருணைக்கொலை செய்ய அனுமதியா? இன்று தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments