அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது தேமுதிக! – அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அரசியலில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (13:21 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தேமுதிக தற்போது கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜக, பாமக ஆகிய கட்சிகள் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணிக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. ஆனால் தேமுதிக – அதிமுக கூட்டணி உறுதியாவதில் மட்டும் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இதுகுறித்த தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மூன்று கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தாலும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!.. வானிலை மையம் எச்சரிக்கை!...

அன்று ஜெயலலிதா முன் கைகட்டி நின்னவர்தான் விஜய்! ‘ஜனநாயகன் பிரச்சினை குறித்து சரத்குமார் காட்டம்

நாளை முதல் 2 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்.!

உங்க கனவ சொல்லுங்க, அதை திட்டமாக திராவிட மாடல் ஆட்சி மாற்றும்: முதல்வர் ஸ்டாலின்

2026 தேர்தல் முடிவு தொங்கு சட்டமன்றம் தான்.. அடித்து கூறும் அரசியல் விமர்சகர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments