அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது தேமுதிக! – அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அரசியலில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (13:21 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தேமுதிக தற்போது கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜக, பாமக ஆகிய கட்சிகள் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணிக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. ஆனால் தேமுதிக – அதிமுக கூட்டணி உறுதியாவதில் மட்டும் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இதுகுறித்த தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மூன்று கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தாலும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!.. ஈரான் போர் எதிரொலி!.. இந்தியாவில் மதுபான விலை உயர்வு!...

எங்கே என் பங்குன்னு கேட்க மாட்டேன்!.. தேர்தலில் போட்டியில்லை!.. கமல் அறிவிப்பு!...

நாங்க மட்டும் தக்காளி தொக்கா?!.. தேமுதிகவுக்கு 10 சீட்!. கோபத்தில் கூட்டணி கட்சிகள்!..

குடும்ப தலைவிக்கு ஒரு ஃபிரிட்ஜ்!.. அதிமுக தேர்தல் அறிக்கை!..

திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எவ்வளவு சீட்!.. கரன்ட் அப்டேட்!....

அடுத்த கட்டுரையில்
Show comments