Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக தனித்து போட்டி: பிரேமலதா அறிவிப்பு!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (15:42 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அந்த தொகுதியில் தனித்து போட்டியிடப் போவதாக தேமுதிக அறிவித்துள்ளது. 
 
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று அறிவிக்கப்பட்டார் என்பதும் அவர் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமான தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேமுதிக தனித்து போட்டி என அறிவித்துள்ளது. சற்றுமுன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஆனந்த் என்பவர் போட்டியிடுகிறார் என அறிவித்துள்ளார் 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் தனித்து போட்டியிலும் தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments