Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்!

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (10:43 IST)
2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவங்கியுள்ளது. 

 
வரும் அக்டோபர் மாதம் தீபாவளி வருவதால் இதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவங்கியுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24 ஆம் தேதி (திங்கள் கிழமை) வருவதால் முன்னதாக அக்டோபர் 21 ஆம் தேதியே (வெள்ளிக்கிழமை) மக்கள் சொந்த ஊருக்கு செல்ல முன்படுவர். 
 
எனவே அக்டோபர் 21 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. அதன்படி தீபாவளிக்கு சொந்த ஊர் சொல்பவர்கள் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணைய தளம் மூலம் டிக்கெட் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம்.
 
மேலும், அக்டோபர் 22 ஆம் தேதி பயணம் செய்ய வரும் 24 ஆம் தேதியும், அக்டோபர் 23 ஆம் தேதி பயணம் செய்ய வரும் 25 ஆம் தேதியும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments