Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் அறிவித்த புதிய நிர்வாகிகள் - திவாகரனுக்கு பிபி ஏற்றிய முதல்வர்

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (14:05 IST)
அதிமுக துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் சமீபத்தில் அறிவித்த அதிமுக நிர்வாகிகள் பட்டியல் தொடர்பாக, திவாகரனுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கும் இடையே மோதல் எழுந்ததாக கூறப்படுகிறது.


 

 
இரண்டு மாதங்கள் பொறுமையாக இருப்பேன் என தினகரன் கூறிய கெடு கடந்த 4ம் தேதியோடு முடிவடைந்தது. இதையடுத்து அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதிமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.  அதை ஏற்பதாக சிலரும், ஏற்காமாட்டோம்.. நாங்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழே செயல்பட விரும்புகிறோம் எனக் கூறி வருகின்றனர்.
 
தினகரனுக்கும், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் இடையே மோதல் இருந்தவரை, திவாகரனின் கருத்துகளை முதல்வர் பரிசீலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால், சமீபத்தில் அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவதாக தெரிவித்தனர். இதனால், ஆட்சி முடிவுகள் பற்றி டெல்லியிடம் மட்டும் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான், தினகரனின் நிர்வாகிகள் பட்டியலுக்கு, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


 

 
இது திவாகரன் தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாம். இது தொடர்பாக எடப்பாடி தரப்பிடம் பேசிய திவாகரன், கடுமையான கோபத்திற்கு சென்றதால் அவருக்கு பி.பி எகிறிவிட்டதாம். அதையடுத்து, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments