Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி... மாணவர்கள் ஆர்வம்

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (20:58 IST)
கரூரில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.    இதில்  சுமார்
200 - க்கும் மேற்பட்ட பள்ளி  மாணவ  மாணவிகள்  பங்கேற்றனர். 


கரூர்  காந்திகிராமம்  தனியார்  பள்ளியில்  மாவட்ட  அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்திலிருந்து 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த சிலம்பாட்ட போட்டிகள் இரண்டு வகையாகவும், அதில் தனித்திறன் போட்டி மற்றொன்று தொடு முறை ஆகியவாறு போட்டிகள்  நடைபெற்றது.

இதில்  வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. மேலும்., இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளும்,  முதலிடம் பிடிக்கும் வீரர்களும் திருநெல்வேலியில் மாநில அளவிலான சிலம்பாட்டம் போட்டியில் விளையாட தகுதி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சியினை தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தலைவர் ராஜேந்திரன், கரூர் மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான மலையப்பசாமி தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.  கரூர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments