Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயமான 7 போலீசார் திரும்பி வந்ததாக தகவல்.. என்ன நடந்தது?

Siva
திங்கள், 24 ஜூன் 2024 (07:34 IST)
கள்ளச்சாராய வேட்டைக்காக சென்ற ஏழு போலீசார் மாயமானதாக நேற்று தகவல் வெளியான நிலையில் தற்போது அவர்கள் திரும்பி வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கள்ளச்சாராய வேட்டை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கல்வராயன் மலைப்பகுதியில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர் என்பதும் இந்த கள்ளச்சாராய வேட்டையில் பல ஆயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்ட போலீசார்களில் ஏழு பேர் திடீரென மாயமானதாக நேற்று தகவல் வெளியான நிலையில் தற்போது அந்த ஏழு பேரும் திரும்பி வந்துவிட்டனர்.

அவர்களிடம் செய்த விசாரணையில் ஓய்வுக்காக சிறிது நேரம் அமர்ந்து விட்டு தாமதமாக வந்ததாகவும் அனைவரும் நலமாக இருப்பதாகவும் எனவே அவர்களைப் பற்றி தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 நாட்களில் இடிந்து விழுந்த 5 பாலங்கள்..! பீகாரில் அதிர்ச்சி..!!

காவல்துறைக்கு 100 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தற்போது இல்லை..! அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்..!!

பட்டாசு ஆலை விபத்துகளுக்கு திமுகவின் மெத்தனபோக்கே காரணம்.! டிடிவி தினகரன் காட்டம்..!

தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயமாகின்றன.. சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments