Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த பையன் என் பேரன் மாதிரி..! – வருத்தம் தெரிவித்த திண்டுக்கல் சீனிவாசன்!

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (12:57 IST)
சிறுவனை செருப்பை கழட்டிவிட சொன்னதற்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

முதுமலையில் உள்ள யானைகள் சரணாலயத்தில் புத்துணர்வு முகாமை தொடங்கி வைக்க வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றுள்ளார். முகாமை தொடங்கி வைத்துவிட்டு நடந்து சென்று கொண்டிருந்த அமைச்சர் காலில் செருப்பு பலமாக மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த பழங்குடி சிறுவனை அழைத்து தனது செருப்பை கழட்டிவிடும்படி கூற அந்த சிறுவனும் கழட்டி விட்டுள்ளான். இந்த சம்பவத்தை தொடர்ந்து பலர் சிறுவனை செருப்பை அகற்ற சொன்னது தவறு என கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்னது உள்நோக்கத்தோடு செய்யப்பட்டதல்ல. பெரியவர்களை அழைத்தால் தவறாகிவிடும் என்பதால்தான் சிறுவனை அழைத்தேன். எனது பேரனை போலதான் நான் அந்த சிறுவனை நினைத்தேன்.” என்று கூறியுள்ள அவர் தனது செயலுக்காக வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments