Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவலர்கள் ஹெல்மெட் அணியாவிட்டாலும் தண்டனை உண்டு

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (10:25 IST)
தமிழ்நாட்டில் தற்போது இரு சக்கர வாகன ஓட்டிகளால் ஏற்படும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இதை கட்டுக்குள் கொண்டு வர காவல் துறையும், போக்குவரத்து துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர், வேகமாக ஓட்டுபவர், விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர் என அனைவருடைய ஓட்டுனர் உரிமங்களையும் ரத்து செய்தது போக்குவரத்து துறை. கடந்த 5 மாதங்களில் மட்டும் 36 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை போன்ற மாநகரங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் சிலரின் ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் அதிகாரி “ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும்  காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை திண்டுக்கள் மாவட்ட மக்கள் பாராட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்! - 30,000 பேர் பங்கேற்ற தியான நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு!

அரசு விளம்பரங்களில் முதல்வர் பெயர்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

நீங்கள் உண்மையிலேயே இந்தியரா? ராகுல் காந்தியிடம் சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!

ஏங்ங்க.. ஊரே வெள்ளக்காடு.. ஜாலியா டைவ போடு! சப்இன்ஸ்பெக்டர் அட்ராசிட்டி! - நெட்டிசன்கள் கண்டனம்!

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்! மதவெறி இந்துத்துவா கும்பல் அராஜகம்! - முதல்வர் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments