Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கொள்கை பரப்புச் செயலாளராக லியோனி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (15:18 IST)
திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் சபாபதி மோகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்களாக ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இதில் ஆ ராசா துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு விட்டார். இதையடுத்து தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆ ராசா மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரின் இடங்களுக்கு இப்போது திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் சபாபதி மோகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதை திமுகவின் புதிய பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். புதிய பொறுப்பாளர்களுக்கு திமுகவினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments