Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்க புதையல் இருக்கு..! தொழிலதிபரை ஏமாற்றி மஞ்ச குளித்த ஜோசியர் கைது!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (09:32 IST)
திண்டுக்கல்லில் தொழிலதிபர் ஒருவருக்கு தங்க புதையல் எடுத்து தருவதாக கூறி பல லட்சத்தை சுருட்டிய ஜோதிடரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகெ உள்ள கிராமப்பகுதியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தங்கவேல். கடந்த சில மாதங்களாக தொழிலில் பிரச்சினைகளை சந்தித்து வந்த தங்கவேல் நண்பர் பரிந்துரையின் பேரில் கணியூர் கிராமத்தை சேர்ந்த ஜோசியர் சசிக்குமாரை சந்தித்துள்ளார்.

அந்த ஜோசியர் தான் தங்க புதையலை கண்டுபிடிப்பதில் நிபுணர் எனவும், கோவையில் பெண் ஒருவர் வீட்டில் தங்க புதையல் இருப்பதாகவும் அதை கண்டெடுத்து தங்கவேல் வீட்டில் வைத்து பூஜை செய்தால் மேலும் தங்க புதையல் நிறைய கிடைக்கும் எனவும் கூறியுள்ளார். அதை நம்பிய தங்கவேலிடம் கொஞ்சம் கொஞ்சமாக பல லட்சம் ரூபாய், கார் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார் ஜோசியர் சசிக்குமார்.

ஆனால் தங்க புதையலை மட்டும் கண்டுபிடித்து தராமல் இருந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் காரில் சென்ற சசிக்குமார், தங்கவேலிடம் போனில் பேசிவிட்டு கட் செய்யாமலே, அவரை ஏமாற்றுவது குறித்து டிரைவருடன் பேசிக் கொண்டு வந்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தங்க வேல் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அதை தொடர்ந்து சசிக்குமாரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த தங்கவேலின் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments