Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் மாநிலத்திலும் இரவுநேர ஊரடங்கு: திரையரங்குகளை மூடவும் உத்தரவு

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (09:16 IST)
கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது நாளை முதல் ராஜஸ்தான் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது
 
நாளை முதல் மாலை 6 முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் மாலை 4 மணியுடன் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் அனைவரும் மாலை 6 மணிக்குள் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள், நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி இல்லை என்றும் ராஜஸ்தான் அரசு கூறியுள்ளது.
 
ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜஸ்தான் மாநில அரசு எச்சரித்துள்ளது. நாளை முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அதன் பின்னர் நிலையமை அனுசரித்து ஊரடங்கு நீடிக்குமா? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது,

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments