Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு அம்மா-அப்பா வச்ச பெயர் போதும்: சவுகிதாரை கலாய்த்த தினகரன்

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (20:26 IST)
கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி, பாஜக தேசிய செயலாளர் அமித்ஷா ஆகியோர் உள்பட பெரும்பாலான பாஜகவினர் தங்களது பெயருக்கு முன் சவுகிதார் என்று போட்டுக்கொள்வதை வழக்கமாக்கியுள்ளனர். சவுகிதார் என்றால் பாதுகாவலன் என்று அர்த்தமாம். நாட்டை பாதுகாப்பவர்கள் நாங்கள் என்ற அர்த்தத்தில் பெயருக்கு முன்னர் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது 'சவுகிதார் போன்று நீங்களும் பெயருக்கு முன்னாள் ஏதாவது போட விரும்புகின்றீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்தார். எனக்கு என்னுடைய அம்மா அப்பா வைத்த பெயரே போதும், அதில் மாற்றம் செய்ய விரும்பவில்லை. 
 
நாட்டின் பாதுகாவலர்கள் என்று பெயரை போட்டு கொண்டிருப்பவர்களுக்கு நாட்டின் உள்ளே என்ன வேலை? அவர்கள் எல்லோரும் பார்டருக்கு செல்லும் நாள் நெருங்கிவிட்டது' என்று கலாய்த்தார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments