Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப முடிவு

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (13:33 IST)
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கொறடா  ராஜேந்திரன் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது 4 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. 
 
அதிமுக எதிராக செயல்படும் 4 எம்.எல்.ஏக்களான கள்ளக்குறிச்சி - பிரபு, விருத்தாச்சலம் - கலைச்செல்வன், அறந்தாங்கி - ரத்தினசபாபதி, நாகை -தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு சபாநாயகர் தனபால் இன்று நோட்டீஸ் அனுப்புவார் என்று தகவல் வெளியாகிறது.
 
அதிமுக எம்.எல்.ஏக்களாக உள்ள கலைச்செல்வன், ரத்தினசபாபதி, மற்றும் பிரபு ஆகியோர் மக்களவை தேர்தலில் தினகரனின்  அமமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். 

தமிமுன் அன்சாரி திமுகவுக்கு ஆதரவு அளித்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற நால்வர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த பரிந்துரையை ஏற்று சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 
மேலும் இந்த நால்வருக்கும் நோடீஸ் அனுப்பபட்ட பிறகு 15 நாட்களுக்குள் சரியான விளக்கம் அளிக்கவில்லை எனில் இதைக்காரணம் காட்டி  அவர்கள் நால்வரையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments