ஜெ.வின் வாகனத்தை பயன்படுத்திய தினகரன் - அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 11 மார்ச் 2017 (11:09 IST)
அதிமுக சார்பில், சமீபத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள சென்ற அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன், மறைந்த முதவ்லர் ஜெயலலிதாவின் வாகனத்தைப் பயன்படுத்தியது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின், அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரின் தோழி சசிகலா, ஜெ. பயன்படுத்தி வந்த காரை பயன்படுத்தி ஜெ.விசுவாசிகள மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  அதன்பின் அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். எனவே, ஜெ. வின் கார் போயஸ்கார்டன் வீட்டில் நின்று கொண்டிருந்தது.


 

 
இந்நிலையில், சமீபத்தில், அதிமுக சார்பில் திருநின்றவூரில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை திறக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் கலந்து கொண்டு, சிலைகளை திறந்து வைக்க வந்த தினகரன்,  ஜெ.வின் வாகனத்தில் வந்தார். இதை அங்கிருந்த சில ஜெ.வின் விசுவாசிகள் அதிர்ச்சியாக பார்த்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணிக்கு போகும் ஓபிஎஸ், டிடிவி?!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!...

மது வாங்கும்போது 10 ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும்.. காலி பாட்டிலை கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெறலாம்: டாஸ்மாக்

சகோதரி மம்தாவுக்கு வாழ்த்துக்கள்.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவுகள்..!

தற்கொலைக்கு முயன்ற மகள் உயிர் தப்பினார்.. காப்பாற்ற சென்ற தந்தை பரிதாப பலி..!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments